மாண்புமிகு தமிழ்நாடு முதமைச்சர் அவர்களின் சட்ட மன்ற பேரவை விதி எண்.110 இன் கீழான அறிவிப்பின்படி கூட்டுறவு நிறுவனங்களில் 5 பவுன் (மொத்த எடை 40 கிராம்) வரை நகையீட்டின் பேரில் 31.03.2021 ஆம் நாள் வரை வழங்கப்பட்ட பொது நகைக்கடன்கள் தள்ளுபடி செய்து அரசாணை (நிலை) எண்.97 கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு (சிசி1) த் துறை நாள் 01.11.2021 வெளியிடப்பட்டுள்ளது.
அவ்வரசாணையின் படி, நீலகிரி மாவட்டத்திலுள்ள கூட்டுறவு நிறுவனங்களில் 31.03.2021 ஆம் நாள் வரை வழங்கப்பட்ட நகைக்கடன்களில் கீழ்கண்ட பட்டியலின்படி, 36901 கடன்கள் தள்ளுபடிக்கு தகுதி வாய்ந்தவை எனக் கண்டறியப்பட்டு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
பட்டியலில் இடம்பெற்றுள்ள தொடர்புடைய கூட்டுறவு சங்கங்கள் -வங்கிகளை அணுகி நடைக்கடன் தள்ளுபடி சான்று மற்றும் நகைகளைப் பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.